உடப்பு திரெளபதை அம்மன் வருடாந்த ‘தீ’ மிதிப்பு இன்று

உடப்பூர், அருள்மிகு திரெளபதி அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு உற்சவம் இன்று மாலை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. கடந்த ஜுலை 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம் 18 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புத்தளம் மாவட்டத்திலமைந்துள்ள உடப்பு தமிழ்க் கிராமத்தில் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் அருள்மிகு திரெளபதிஅம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு வைபவம் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகிறது.

தீ மிதிப்பு வைபவம் நடைபெறுவதை முன்னிட்டு ஆலயத்தின் பஸ் வண்டிகள் உட்பட போக்குவரத்து சபை, தனியார் விசேட பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளன. நாளை தருமருக்கு பட்டாபிஷேகம் சூட்டுதல் நிகழ்வும், துவஜாவரோஹனமும் நடைபெறும். நாளை மறுதினம் காலை பால்குட பவனியுடன் மஹோற்சவம் நிறைவுபெறும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *