நொச்சிமோட்டைப் பிரதேசத்தில் நாளை மீள்குடியேற்றம் ஆரம்பம்

sri-lankan-housing.jpgவவுனியா மெனிக்பார்மில் தங்கியுள்ள இடம்பெயர்ந்தவர்களில் 1500 பேரை ஒமந்தை நொச்சிமோட்டைப் பிரதேசத்தில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இப்பிரதேசங்களில் புலிகளால் புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதோடு பொது மக்கள்  பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வீதிகள் புனரமைக்கப்பட்டு நீர் மற்றும் மின்சார வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய வகையில் ஒமந்தைச் சோதனைச் சாவடியை அங்கிருந்து பின்வாங்கப்பட்டு வேறு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *