இடைத்தங்கல் முகாம்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள் – சிவநாதன் கிஷோர்

srilanka-refugees.jpgஅரசாங் கத்தின் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மக்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவது சில காலமாகவே நடைபெற்று வருவதாகவும், இது ‘எல்லோருக்கும்’ தெரியும் என்றும் அவர் BBC தமிழோசையிடம் தெரிவித்தார். இவ்வாறு வெளியேறுவதற்கு மக்கள் பெரும் பணம் கொடுப்பதாகவும், ஒரு சிலர் விமான நிலையம் வரை அழைத்து செல்லப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக எந்த அரசியல் கட்சி மீதோ, எந்த ஒரு தனிநபர் மீதோ குற்றம் சுமத்தாத நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், தனக்கு இது தொடர்பில் உறுதியான நம்பிக்கைக்குரிய தகவல்கள் இருப்பதாகவும், முகாம்களில் இருந்து மக்கள ‘நோயாளிகள்’ என்ற போர்வையில் வெளியில் கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை செயலர் கோத்தாபய ராஜபக்ஷ், இவ்வாறு மக்கள் தப்பியிருப்பது தொடர்பில் தங்களுக்கு ஆதாரம் இருப்பதாகவும், சிலரை கைது செய்திருப்பதாகவும் கூறினார். இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பல்லி
    பல்லி

    மிக சரியான தகவல்; ஆனால் அதுக்காக என்னவிலை (பணம்) வாங்குகிறார்கள் என்பதையும் பளய கூத்தாடி என்னும் வகையில் சொல்ல வேண்டாமா?

    Reply