கண்டி தலதா மாளிகை ரந்தோலி பெரஹர இன்று ஆரம்பம்

kandy-parahara.jpgகண்டி வரலாற்று புகழ் மிக்க எசல பெரஹரவில் இன்று முதலாம் திகதி முதல் ரந்தோலி பெரஹர ஆரம்பமாகிறது. இன்று முதலாம் திகதி முதல் 5ம் திகதி வரை நடை பெறவுள்ள இந்த ரந்தோலி பெரஹரவையடு த்து 6ம் திகதி பகல் பெரஹர இடம்பெறவுள்ளது.

6ம் திகதி பகல் பெரஹர முடிந்தபின் தலதா மாளிகை தியவதன நிலமே நிலங்க பிரதீப் தெல பண்டார தலைமையில் பஸ்நாயக்க நிலமேக்கள் கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கண்டு பெரஹரா இனிதே முடிவுற்ற செய்தியினை அறிவிப்பார்கள். ஜனாதிபதி பெரஹராவில் பங்குபற்றிய சிறந்த கலைஞர்களுக்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்குவார்.

ரந்தோலி பெரஹரவின் போது இங்கு மகியங்கனை ஆதிவாசிகள், வேடர்கள் தலதா மாளிகைக்கு வருகை தந்து வழிபடுவதோடு அவர்கள் சேர்த்து வைத்துள்ள ‘தேன்’ பாணியினை குடுவைகளில் எடுத்துவந்து காணிக்கையாக வழங்குவார்கள். அதுபோல இந்துக்கள் கண்டி கட்டுக்கலை பிள்ளையார் கோவிலிலிருந்து மல்லிகைப்பூத் தட்டுகளுடன் சென்று புனித பேழைக்கு அர்ச்சனை செய்து வழிபடுவார்கள்.

இறுதி ரந்தோலி பெரஹர முடிந்தபின் கெட்டம்பே மகாவலிகங்கையில் நீர்வெட்டு வைபவம் இடம்பெற்று, கட்டுக்கலை கோயிலிலிருந்தே பகல் ஊர்வலம் புறப்படும். கெட்டம்பே மாநகர சபை மைதானத்திலும், போகம்பரை மைதானத்திலும், ஜோர்ஜ் ஈ. டி. சில்வா பூங்காவில் அமைந்துள்ள வாகன தரிப்பிடங்களின் மேல் மாடிகளிலும் காணிவேல் களியாட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *