மொனராகலை மாவட்டத்தில் 20,000 ஏக்கரில் இறப்பர் செய்கை

மொனரா கலை மாவட்டத்தில் 20,000 ஏக்கரில் இறப்பர் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றை அமைச்சர் தி. மு. ஜயரத்ன சமர்ப்பித்துள்ளதுடன் அதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் நேற்று இது குறித்து தெரிவித்த அமைச்சர்; மேற்படி இறப்பர் பயிர்ச்செய்கைக்கான காணிகள் இனங் காணப்பட்டுள்ளதுடன், இந்நடவடிக்கைகள் பற்றிய செயற் திட்டம் பற்றி ஆராய வன இலாகா அதிகாரி மாவட்டச் செயலாளர் உட்பட்ட குழுவொன்றையும் நியமித்துள்ள தாகத் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *