காணாமல் போன மாணவி 7 மாதங்களின் பின் கண்டுபிடிப்பு

images000.jpgதிக்கு வலை பல்லிய கொறட்டுவ பகுதியில் ஏழு மாதங்களுக்கு முன் காணாமல் போன 15 வயதுடைய மாணவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி காணாமல் போன இம் மாணவி தொடர்பாக மாணவியின் பெற்றோர் திக்குவலை பொலிஸ் நிலையத்தில் அப்போது புகார் செய்திருந்தனர்.

இதனையடுத்து, அண்மையில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அம் மாணவி மறைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டினைச் சுற்றி வளைத்த பொலிஸார் மாணவியை மீட்டுள்ளனர்.

அம்மாணவி தன்னைக் கடத்திச் சென்று வைத்திருந்ததாகக் கூறியவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கடத்திச் செல்லப்பட்ட மாணவி மாத்தறை மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *