முகாம்களில் இருக்கும் தமிழர்கள் 6 மாதங்களுக்குள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என இலங்கை அரசு உறுதி அளித்துள்ளதாக இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு குறித்து இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது: “இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு 500 கோடி ரூபா வழங்குவதாக இந்தியா ஏற்கனவே கூறியுள்ளது. இன்னும் என்னென்ன உதவி தேவைப்பட்டாலும் அளிப்பதாக சமீபத்தில் எகிப்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.”இவ்வாறு அவர் தெரிவித்தார்