வடக்கில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் போது படைப் பிரிவுகளின் கட்டளைத் தளபதிகளாக கடமையாற்றிய மூன்று தளபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹ_லுகல்ல தெரிவித்தார்.
அதன்படி கட்டளைத் தளபதிகளான பிரிகேடியர் பிரஸன்ன சில்வா, பிரிகேடியர் சவேந்ர சில்வா மற்றும் பிரிகேடியர் சாகி கால்லகே ஆகிய மூவரும் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
வன்னி நடவடிக்கைகளின் போது 55 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் பிரசன்ன சில்வா கடமையாற்றினார். 58 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் சவேந்ர சில்வா கடமையற்றியதுடன் குடும்பி மலையை மீட்ட பிரிகேடியர் சாகி கால்லகே 59 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக வன்னி நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.
இதேவேளை 53 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான கமல் குணரத்ன மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளதுடன் பல கேர்ணல்கள் பிரிகேடியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.