இவ்வருடம் 213 டெங்கு நோயாளிகள் மரணம்

mosquitfora.jpgஇவ் வருடம் நாடு முழுவதிலும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 213 நோயாளிகள் 26-07-2009 வரை மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  அத்துடன் இந்நோயினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 19ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி, கம்பளை, மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களிலேயே அதிகமானோர்  டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பிரதேசங்களில் நோய் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் கடந்த வராம் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *