மடு உற்சவத்துக்கு முன்னர் வீதி புனரமைப்பு – பஸில் ராஜபக்ஷ நடவடிக்கை

basil-raja.jpgமடு உற்சவத்துக்கு முன்னர் மடு தேவாலயத்துக்குச் செல்கின்ற வீதி முற்றாகப் புனரமைக்கப்பட வேண்டும் என வடக்கின் வசந்தம் செயற்திட்டத்தின் தலைவரான ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் பாராளுமன்ற உறுப்பினர் பஸில் ராஜபக்ஷ புனரமைப்பு நடவடிக்கைகளை மேறகொள்ளும் உத்தியோகத்தர்களைக் கேட்டுள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி மடு உற்சவம் இடம்பெற உள்ளது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் 180 நாட்கள் துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பஸில் ராஜபக்ஷவின் கணகாணிப்பல் மடு தேவாலயம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

பயங்கரவாத நடவடிக்கைகளால் மடு தேவாலயம் சேதமடைந்ததுடன் அதன் புனரமைப்புப் பணிகள் அனைத்தும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டன. தேவாலயத்துக்கு அன்மித்த பகுதிகளில் புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளை அரசாங்கம் இராணுவத்தின் உதவியுடன் அப்புரப்படுத்தி உள்ளது. தற்போது தேவாலயத்துக்குச் செல்லும் வீதியையும் பனரமைத்து பக்தர்களுக்கு சிரமமின்றி மடு யாத்திரையை மேற்கொள்ள வசதி செய்து கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மடு தேவாலயத்துக்குப் பிரவேசிக்கினற வீதியின் 10.6 கிலோ மீற்றர் தூரத்தைப் புனரமைக்க 124.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *