19 இலங்கையர் சுமத்ராவில் கைது

_arrested.jpgசுமத்ரா வில் இலங்கையைச் சேர்ந்த 19 சட்ட விரோத குடியேற்ற வாசிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமத்ராவின் லொம்பொக் பகுதியில் அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலயம் (யூ.என்.எச்.சி.ஆர்.) வழங்கியிருந்த இடத்திலிருந்து இவர்கள் தப்பியோடியதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக பெங்குளு பொலிஸாரை மேற்கோள்காட்டி அந்தாரா செய்திச் சேவை தெரிவித்தது.

சனிக்கிழமை இந்த 18 பேரும் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியிருக்கும் பெங்குளுநகர பொலிஸ் ஆணையாளர் மேலதிக விபரங்களை தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்க தமக்கு அதிகாரம் இல்லை என்றும் பெங்குளு பிராந்திய பொலிஸ் கட்டளைப் பிரிவே இதற்குப் பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.

சாடிங் செம்பகா பொலிஸ் பிரிவில் 7 குடியேற்ற வாசிகளிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். மகேந்திரன் வர்ணன் (25 வயது), சுப்பிரமணியம் (20 வயது), சோமசுந்தரம் விஜயா (28 வயது), ஆறுமுகன் சுசிகரன் (24 வயது), வேதனா ஜோகியம் ரெஜினோல்ட் (28 வயது), தியாகவடிவேல் பகீரதன் (28 வயது), குலசேகரம் ஸ்ரீஸ்வரா (39 வயது) ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பெங்குளுவை பார்ப்பதற்காக அதாவது உல்லாசப் பயண நோக்கத்துடன் அங்கு சென்றதாக ஆறுமுகன் சுசிதரன் கூறியுள்ளார். இவர்களில் 5 பேர் தற்போது பெங்குளு பிராந்திய பொலிஸ் கட்டளைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய 5 பேர் பெங்குளு தென்பகுதியில் வைக்கப்பட்டுள்ளனர்.

பெங்குளுவுக்கு வருவதற்கு முன்னர் தாங்கள் ஜசார்த்தாவில் இருந்ததாக அவர்கள் பொலிஸாருக்கு கூறியுள்ளனர். யூ.என்.எச்.சி.ஆரின் ஆவணப் பத்திரங்களை வைத்திருந்ததால் பொலிஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர். கடவுச்சீட்டுகளுக்கு பதிலாக அவர்கள் யூ.என்.எச்.சி.ஆரின் பத்திரங்களையே வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *