இலங் கையில் உள்ள தூதரகத்தை மூடுவதற்கு சுவீடன் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சுவீடன் நாட்டு வெளியுறவு அமைச்சகம் கூறியிருப்பதாவது: “வெளியுறவு அமைச்சகத்தின் செலவுகளைக் குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2010ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதிக்குள் இலங்கையில் உள்ள தூதரகம் மூடப்பட்டுவிடும். இலங்கையில் வளர்ச்சிப் பணிகளுக்கு சுவீடன் செய்து வரும் உதவியை நிறுத்திக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.” இவ்வாறு மேற்படி அமைச்சகம் தெரிவித்துள்ளது.