மரக்கறி பயிர்களை உற்பத்தி செய்யும் இடங்களில் கஞ்சா தோட்டங்களை பயிரிட்ட 7 பேரை கைது செய்ததுடன், பெருந்தொகையான கஞ்சாவையும் சூரியவௌ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அம்பேகமுவ காட்டிலே இக்கஞ்சா பயிரிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 20 இலட்சம் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,கஞ்சா பயிரிடுவதற்கென பயன்படுத்தப்பட்ட 3 இலட்சம் ரூபா பெறுமதியான உபரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தலமன்வில,அம்பேகம,பலஹருல காட்டுப்பகுதிகளில் பல இடங்களில் கஞ்சா பயிரிடப்படுவதாகவும் அவற்றை விரைவில் கண்டுபிடித்து அழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சூரிய வௌ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாணக்க சுமண சிறி தெரிவித்தார்.