காலி மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் சுட்டுக் கொலை

galle-district.jpgகாலி மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் துஷ்யந்த செனவிரத்ன இன்று காலை பெலிகஹா சந்தியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களினால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து சென்ற வேளையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  தமது பிள்ளைகளுக்கு காலை உணவை கடையொன்றில் வாங்கிக் கொடுப்பதற்காக வாகனத்தை விட்டு இறங்கிய போது துப்பாக்கிதாரிகள் கழுத்து பகுதியில் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
 
எதிர்க்கட்சித் தலைவர் துஷ்யந்த உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *