புலிகளுடன் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -ஐரோப்பிய நாடுகளிடம் இலங்கை கோரிக்கை

புலிகளின் சர்வதேச வலையமைப்பு ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து இயங்கி வருவதால் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் மீது ஐரோப்பிய நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களின் உறுப்பினர்களிடயே பெல்ஜியத்துக்கான இலங்கைத் தூதுவர்; ரவிநாதா ஆரியசிங்க அண்மையில் உரையாற்றியபோதே இக்கோரிக்கையை முன்வைத்தார். அவர் தமது உரையில் மேலும் கூறியதாவது, இலங்கையில் புலிகள் இராணுவ ரீதியாக முற்றிலும் ஒழிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும், அவர்களின் சர்வதேச வலைப்பிண்ணல் (நெட்வொர்க்) ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து இயங்கி வருகிறது. புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் மீது ஐரோப்பிய நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், நிலைமை மிகவும் மோசமாகி விடும்.

ஐரோப்பிய நாடுகளில் ஏராளமான இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர். அவர்களிடம், இலங்கையின் புனரைமப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும்படி ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்த வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *