நாடு முழுவதுமான சனத்தொகை கணக்கெடுப்பு 2011 இல் நடத்தப்படவுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு பூராகவும் சனத்தொகை கணக்கெடுப்பு 1981 ஆம் ஆண்டு முதல் முதலில் மேற்கொள்ளப்பட்டதாக திணைக்களத்தின் முக்கியஸ்தரான சுரஜ்ஜன வைத்தியரட்ன தெரிவித்துள்ளார்.
சனத்தொகை கணக்கெடுப்புக்கென திணைக்களம் தற்போது தேவையான வரைபடத்தையும் வீட்டு விபரங்களையும் சேகரித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பிலான அறிவுரை செயல்திட்டம் 11 மாவட்டங்களில் ஆரம்பித்துள்ளதுடன் குறுகிய காலத்தில் ஏனைய மாவட்டங்களிலும் நடத்தவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.