தமிழ் முஸ்லிம் உறவில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளை மறந்துவிட வேண்டும் – சிவநேசதுரை சந்திரகாந்தன்

தமிழ் மக்களின் போராட்ட காலங்களில் தமிழ் – முஸ்லிம் உறவில் சில கசப்பான நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கலாம் இதனை நாம் மறந்து விட வேண்டும் .இரண்டு இனங்களும் ஒற்றுமையுடன் வாழ்வதன் மூலமே எமது உரிமைகளையும்; கௌரவத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேச சபையின் ஏற்பாட்டில் அல் – சிராஜ் மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற நூலக வாரம் மற்றும் புத்தகக் கண்காட்சியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். ஆவர் தொடர்ந்து தெரிவிக்கையில்.

கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தங்களிடையே ஒற்றுமையை பலப்படுத்துவதன் மூலமே அம்மாகாணத்தில் ஓர் நிலையான அரசியல் ஸ்த்திரத்தினை ஏற்படுத்த முடியும்.”

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எமது மூதாதையர்கள் எவ்வாறு தமிழ் முஸ்லிம் உறவுகளைப் பேணி வந்தார்களோ அவ்வாறே நாம் எமது உறவுகளைப் பேண வேண்டும். அதற்கான சரியான தருணமாக இக் காலகட்டத்தை நான் பார்க்கின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் தற்போது பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் . நிலையானதும் நீண்ட காலத்திற்குமான அபிவிருத்தி என்று நோக்குகின்ற போது அதனை நாம் இன்னும் எட்டவில்லை . காரணம் தமிழ் பேசும் சமூகம் அதிலும் குறிப்பாக தமிழ் சமூகம் அரசியலில் மிகவும் பின் தங்கியே காணப்படுகின்றது. குறிப்பாக கிழக்கு வாழ் தமிழ் மக்களில் அதிகமானவர்கள் அரசியல் சிந்தனைகளில் நாட்டம் குறைந்தவர்களாகவே காணப்படுகின்றார்கள். காரணம் காலம்காலமாக இம்மக்கள் அரசியல் வாதிகளால் ஏமாற்றப்பட்ட வரலாறுகள் உண்டு.

எது எவ்வாறு இருந்த போதிலும் நாம் இனிவருகின்ற காலங்களில் ஒற்றுமையாகவும் இன நல்லுறவோடும் வாழ்வதன் மூலமே எமக்கான அரசியல் தனித்துவத்தினைப் பேண முடியும் “என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் மத்திய தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லாää மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் கிராமிய மின்சாரம் வீடமைப்பு அமைச்சர் எம். எஸ் உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர மீராலெப்பை துல்ஹார் நஹீம் உட்பட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *