கதிர் காமத்தில் இம்மாதம் நடைபெறும் வருடாந்த எஸல பெரகரவில் கலந்துகொள்ளச் செல்லும் பக்தர்களின் நன்மை கருதி பஸ் – ரயில் இணைப்புச் சேவையொன்றை நடாத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி இம்மாதம் 22 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 06 ஆம் திகதி வரையில் இந்த இணைப்புச் சேவையை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கரையோர ரயில் சேவையைப் பயன்படுத்துவோருக்கு மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து கதிர்காமம் வரையில் விசேட பஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று மலையக ரயில் சேவைகளைப் பயன்படுத்துவோருக்கு பண்டாரவளை மற்றும் ஹப்புத்தளை ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து கதிர்காமம் செல்வதற்கான விசேட பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.