இலங்கை-தென்னாபிரிக்க ஜனாதிபதிகள் எகிப்தில் சந்திப்பு

sa-sl.jpgஎகிப்தில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் 15ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜெகப் ஸமாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இரு தலைவர்களுக்குமிடையிலான இந்த சினேகபூர்வ சந்திப்பு இன்று எகிப்தின் ஷார்ம் அஷ்ஷெய்க்கில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சந்திப்பின்போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம மற்றும் தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சர் மெய்ட் இன்கோனா மஷபேன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த உச்சி மாநாட்டுக்கு வருகை தந்துள்ள உலகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசிவரும் ஜனாதிபதி, இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை மற்றும் நாட்டின் சமகால நிலைவரங்கள் என்பன தொடர்பாக அவர்களுக்கு விளக்கமளித்து வருகிறார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *