தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேருவுக்கு மூன்று மாத காலத்துக்கு விடுமுறை வழங்க சபை அனுமதி வழங்கியுள்ளது. சந்திரகாந்தன் சந்திரநேருவுக்கான 3 மாத கால விடுமுறைப் பிரேரணையை நேற்று புதன்கிழமை சபையில் சமர்ப்பித்த துரைரட்ணசிங்கம் எம்.பி. சந்திரகாந்தனுக்கு இன்றிலிருந்து (நேற்று) 3 மாத விடுமுறை வழங்குமாறு முன்மொழிந்தார். பத்மினி சிதம்பரநாதன் எம்.பி. வழிமொழிந்தார்.
இதையடுத்து அவருக்கு விடுமுறை வழங்க சபை இணக்கம் தெரிவித்தது. கடந்த சில வாரங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு விடுமுறை வழங்க கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த அரச தரப்பினர் நேற்று எதுவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.