கழிவகற்றும் 10 பவுஸர்கள் யூனிசெப் நிறுவனத்தால் அன்பளிப்பு

00001111.jpgவவுனியா நலன்புரிக் கிராமங்களில் உள்ள மக்களின் அடிப்படை சுகாதார நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில்; தற்காலிக மலசல கூடங்களிலிருந்து கழிவுகளை அகற்றும் 10 பவுஸர்களை யுனிசெப் நிறுவனம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனிடம் இந்த பவுஸர்களை யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிலிப் டுவமெல்லே இன்று காலை  கையளித்தார். இதற்கான வைபவம் யுனிசெப் நிறுவனத்தின் கொழும்பு பணியகத்தில் நடைபெற்றது. ஒவ்வொன்றும் ஐயாயிரம் லீட்டர் கொள்ளளவு கொண்ட இந்த பவுஸர்களின் பெறுமதி 50 மில்லியன் ரூபாவாகும்.

நலன்புரிக் கிராமங்களில் உள்ள மக்களின் நன்மை கருதி மேலும் பல உதவிகளை யுனிசெப் நிறுவனம் எதிர்காலத்தில் வழங்கவுள்ளதாக வைபவத்தில் உரையாற்றிய யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிலிப் டுவமெல்லே தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *