ஈழத்தை மட்டுமே வென்றெடுப்பதற்கு புலிகள் முயன்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது – பிரதமர்

pmsrilaka.jpgவன்னி யில் ஆயுதங்கள், பணம், நகைகள் தொகை தொகையாக மீட்கப்படுவதனால் புலிகளின் ஆட்டம் என்னவென்பது தற்போது புரிகின்றது. அதுமட்டுமல்லாது புலிகள் ஈழத்தை மட்டுமே வென்றெடுப்பதற்கு முயன்றனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என்று பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார்.

தென்னிலங்கை மக்களை தமிழர்கள் அன்று இருண்ட கண்ணாடி கொண்டே பார்த்தனர். எனினும் இன்று அவநம்பிக்கையை அழித்து நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலமாக சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவோம் என்றும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *