வவுனியா மாவட்ட முதலாவது மீள்குடியேற்றம் அடுத்தவாரம் – அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தகவல்

risadbadurudeen.jpgவவுனியா மாவட்டத்தில் நடத்தப்படுகின்ற முதலாவது மீள்குடியேற்ற நடவடிக்கை அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
வவுனியா வடக்கு உதவி அரச அதிபர் பிரிவிலுள்ள எட்டு கிராமங்களில் மக்களை மீளக்குடியமர்த்தும் இந்த நடவடிக்கைகள் தொடர்பான விசேட கூட்டம் அண்மையில் நடைபெற்றதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வவுனியாவுக்கு வடக்கே புலிகளின் பிடியிலிருந்த சுமார் 20 கிராம சேவகர் பிரிவுகளைச்சார்ந்த  எட்டு கிராமங்களில் முதற்கட்டமாக மக்கள் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் நடத்தப்படுகின்ற முதலாவது மீள்குடியேற்ற நடவடிக்கை இதுவாகும் என்பதுடன் வவுனியாவுக்கு வடக்கே மூன்றாம் கட்டமாக நடை பெறும் மீள்குடியேற்ற நடவடிக்கையாகும். முதற்கட்டமாக மன்னார் சிலாவத்துறையிலும்ää இரண்டாம் கட்டமாக மன்னார் முசலியிலும் இடம்பெற்றிருந்தது.

வவுனியா வடக்கு பிரதேசத்தின் நெடுங்கேணி தெற்கு கிராமசேவகர் பிரிவிலுள்ள மருதன்குளம், புளியங்குளம் கிராமசேவகர் பிரிவிலுள்ள கலீமடு, புலியன்குளம்,  கனகராயன்குளம், குஞ்சுகுளம்,  பரந்தன், நெடுஞ்கேணி,  மன்னார்குளம் ஆகிய எட்டு கிராமங்களிலுள்ள மக்களே மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *