மீட்கப்பட்ட வன்னிப் பகுதியில் பெளத்த புராதன இடங்களை இனங்கண்டு பாதுகாப்பதும் அவசியமாகும்.- எல்லாவல மேதானந்த தேரர்

parliament.jpgபயங் கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டைக் கட்டியெழுப்ப சகலரும் முன்வரவேண்டிய அதேவேளை, மீட்கப்பட்ட வன்னிப் பகுதியில் பெளத்த புராதன இடங்களை இனங்கண்டு பாதுகாப்பதும் அவசியமாகும்.

இன, மத பேதங்களுக்கப்பால் நாட்டைக் கட்டியெழுப்புவதில் சகல கட்சிகளும் இணைந்து செயற்படுவது காலத்தின் தேவையாகிறது. மனிதப் படுகொலைகளை மேற்கொண்டு நாட்டைச் சீரழித்த பிரபாகரன் அழிக்கப்பட்டுவிட்டார். அவர் செய்த படுகொலைகளே இறக்கும்போது சயனைட்குப்பி கூட இல்லாத நிலையை அவருக்குத் தோற்றுவித்தது. அவசர காலச்சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எல்லாவல மேதானந்த தேரர்: (ஹெல உறுமய கட்சி எம்.பி) மேற்கண்டவாறு கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *