வவுனியா நிவாரணக் கிராமங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்த மக்களுக்காக குவைத் அரசாங்கம் 300 தொன் நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் குவைத் நாட்டுக்கான பிரதிநிதி இந்நிவாரணப் பொருட்களுடன் இலங்கை வந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.
குவைத் அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிவாரணப் பொருட்களுள் 4 ஆயிரம் கூடாரங்கள், 4 ஆயிரம் போர்வைகள், 4 ஆயிரம் உலர் உணவுப் பொதிகள் மற்றும் சமயலறை உபகரணங்கள் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிவாரணப் பொருட்கள் வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதற்காக இலங்கை வந்துள்ள அந்நாட்டுப் பிரதிநிதியினால் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.