மாத்தளை மாவட்டத்தில் எலி நோயினால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது என மாத்தளை சுகாதார சேவைப் பணிப்பாளர் அநுர திஸாநாயக தெரிவிக்கி ன்றார். கடந்த வாரம் 223ஆக இருந்த இந்நோயாளிகளின் எண்ணிக்கை இவ் வாரம் 235ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்டத்தில் இதுவரை எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இருவர் மரண மடைந்துள்ளனர். மாத்தளை மாவட்டத்தில் இறத்தோட்டை, யட்டவத்த, முவன்தெனிய, பண்டாரபொல, மஹவெல, மடவள உல்பத்த தம்புள்ள ஆகிய பகுதிகளிலே இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது எனவும் பணிப்பாளர் அநுர திஸாநாயக மேலும் தெரிவித்தார்.