மொனராகலை, மடுல்ல கிராமத்துக்கு சூரிய சக்தியினூடாக மின்சாரம் வழங்கல்

bulbs.jpgஇலங்கை வரலாற்றில் முதற் தடவையாக மொனராகலை, கல்கமுவ தேர்தல் தொகுதியில் உள்ள மடுல்ல கிராமத்துக்கு சூரிய சக்தியினூடாக இன்று (30) மின்சார வசதி அளிக்கப்பட உள்ளது.

இந்திய அரசாங்கத்தின் 24 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் 300 வீடுகளுக்கு இவ்வாறு மின்சார வசதி அளிக்கப்படுவதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது. இதன்படி மடுல்ல கிராமத்தில் உள்ள 300 வீடுகளுக்கும் 80 ஆயிரம் ரூபா பெறுமதியான சூரிய சக்தியூடாக மின்சாரம் உற்பத்தி செய்யும் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

மின்மாற்றிக் கோபுரங்கள் நிர்மாணிக்க முடியாத கஷ்டப் பகுதி கிராமங்களுக்கு சூரிய சக்தி மற்றும் மாற்று வழிகளினூடாக மின்சார வதி அளிக்க மின்சக்தி எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இன்றைய நிகழ்வில் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் டபிள்யு. டீ. ஜே. செனவிரத்ன இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *