ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதித் தலைவர் இக்சியோயு ஸாஓ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று காலை சந்தித்து கலந்துரையாடினார். அலரி மாளிகையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி குறித் இருவரும் கருத்துக்களைப் பரிமறிக்கொண்டனர்.ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இலங்கை மத்திய வங்கியின் ஆணையாளர் அஜீத் கப்ரால், நிதியமைச்சின் செயலாளர் சுமித் அபேசிங்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.