பிரான்ஸ் கூட்டுப்படைகளின் தளபதி- ஜெனரல் சரத் பொன்சேகா சந்திப்பு!

france_force_.jpgஇந்து சமுத்திரப் பிரதேசத்தின் பிரான்ஸ் கூட்டுப்படைகளின் தளபதி வைஸ் எட்மிரல் ஜெராட் வலின் இன்று காலை இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மைக்கல் லுமாக்ஸ{ம் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். இலங்கையின் சம கால பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பில் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

வன்னியில் புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக படையினர் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இச்சந்திப்பின்போது விளக்கமளித்தார். இருவரும் நினைவுப் பரிசுகளையும் பரிமாறிக்கொண்டனர். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • rajah
    rajah

    ok now they are want is this very good

    Reply
  • palli.
    palli.

    தம்பியவை இந்த இளயோர் அமைப்போ அல்லது KP யின் செயல்வீரர்களோ உங்கள் மீது மகிந்தாவின் பார்வை(சனிபார்வை) விழுந்திருக்கிறது போல்உள்ளது ;அதானால் இந்த சங்கிலி ஊர்வலம் ;மோதிர போராட்டம் காப்பு கண்துடைப்பு அல்லது ஆறுதல் ஆட்டம் இவைகளை நிறுத்தி விட்டு அந்த வன்னி மக்களுக்கு உங்களால் முடிந்த சிறு உதவிகளை தன்னும் செய்ய முயற்ச்சிக்கவும்; அதுக்காக பறக்காத விமானம் விட தீர்மானிக்க வேண்டாம்: புலிகொடி அகல்தலும் ;வெள்ளை கொடி புகுதலுமே இம்மினத்துக்கு தற்ப்போது தேவைமட்டுமல்ல அவசியமும் கூட;

    Reply
  • santhanam
    santhanam

    எங்கள் தலைவர் பிராபாகரன் தமிழ்ழம் வேண்டும் இவை இரண்டையும் நாங்கள் விடமாட்டம். வெள்ளைகொடியோ அது என்ன. எங்களிற்கு மஞ்சள் கொடிதான் தெரியும் இவர் அப்பதுரோகி. றோவிடம் விலைபோயிற்றார்

    Reply