‘வளவை மரபுரிமை – 2009’ – வர்த்தகக் கண்காட்சி 30முதல் ஜூலை4 வரை

தகவல் ஊடகத்துறை அமைச்சு ஜனாதிபதி செயலகம் உட்பட பல அமைச்சுக்கள் இணைந்து நடாத்தும் “வலவே உறுமய – (வளவை மரபுரிமை) 2009 வர்த்தகக் கண்காட்சி இம் மாதம் 30 ஆம் திகதி முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை தெற்கின் அங்ருணுகொலபெலஸ்ஸ மகாவலி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அமரர் டி. ஏ. ராஜபக்ஷவினால் நிர்மாணிக்கப்பட்ட “சந்திரிகாவெவ” திட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவையொட்டிய நிகழ்வாகவே “வலவே உறுமய” கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சி இடம் பெறவுள்ளது.

இக் கண்காட்சி நிகழ்வுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் முக்கிய கலந்துரையாடல் நிகழ்வொன்று நேற்றுத் தகவல் ஊடகத்துறை அமைச்சில் இடம் பெற்றது. ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர், கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந் நிகழ்வில் தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க கண்காட்சி தொடர்பாக விளக்கமளித்தார்.

‘தேசத்துக்கு மகுடம்’ கண்காட்சியைப் போன்று பாரிய நிகழ்வாக “வலவே உறுமய” கண்காட்சி இடம் பெறவுள்ளது. நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சு, நிர்மாணம் மற்றும் பொறியியல்துறை, அமைச்சுக்கள் இணைந்து இக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளதுடன் ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலுடன் இது நடைபெறவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *