யாழ் தேர்தல் குறித்து புத்தளம் மக்களிடையே ஆர்வம் இல்லை?

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி சபை தேர்தல்கள் தொடர்பாக, யாழ்ப்பாணத்திலிருந்து 19 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்களிடையே ஆர்வம் இல்லை என்று எமது செய்தியாளர் கூறுகிறார்.

அங்கு நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான முடிவுகளை ஆடவர்களே எடுப்பார்கள் என்றும் புத்தளம் பகுதியில் இருக்கும் சில மகளிர் கருத்து வெளியிட்டுள்ளனர். யாழ் பகுதியில் இருக்கும் தமிழ் மக்களிடையே கூட இந்தத் தேர்தல் நடத்தப்படுவதில் விருப்பமில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜஃபருல்லா.

தமது உறவினர்கள் வவுனியா மற்றும் இதரப் பகுதிகளில் இருக்கும் முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பதே தேர்தலுக்கு மக்களிடையே ஆதரவு இல்லாதததுக்கு காரணம் என்றும் அவர் கூறுகிறார். எனினும் தேர்தலுக்கு ஆதரவாகவும் சில குரல்கள் ஒலிக்கின்றன

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *