பிரான்ஸ் நாட்டின் அதிபர் நிகோலஸ் சர்கோசி அவர்கள் பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம் பெண்கள் பர்தாவை அணிவதை கடுமையாக கண்டித்து பேசியிருக்கிறார். நாட்டின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், தமது கொள்கை தொடர்பாக அவர் ஆற்றிய உரையிலேயே இதனை தெரிவித்திருந்தார்.
பெண்களின் தலையிலிருந்து கால் வரை மூடும் இந்த பர்தாவை அணிவது என்பது பெண்களை அடிமைப்படுத்துவதாகவும், அவர்களின் கண்ணியத்தை குறைப்பதாகவும், அதனால் பர்தா உடை பிரான்சில் வரவேற்கப்படாது என்றும் அவர் கூறினார். இத்தகைய பர்தாவை பொது இடங்களில் அணிவதற்கு தடை விதிக்கலாமா என்பதை ஆராய்வதற்காக நாடாளுமன்ற நிலைக்குழுவை அமைப்பதற்கு சர்கோசி தமது ஆதரவை அளித்தார்.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நாட்டின் அதிபர் ஒருவர் உரை நிகழ்த்தியிருப்பது நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல் முறை. இதற்கு எதிரான சட்ட ரீதியிலான தடையானது குறுகிய பெரும்பான்மையுடன் கடந்த ஆண்டு நீக்கப்பட்டது.