இலங் கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நசீத் இன்று அநுராதபுரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றுப் பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்த மாலைதீவு ஜனாதிபதி இன்று அநுராதபுரத்துக்கு விஜயம் செய்தார்.
இதேவேளை, மாலைதீவு ஜனாதிபதி இன்று முற்பகல் கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாகக் கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.