தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று வியாழக்கிழமை இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள செட்டிகுளம் நலன்புரி நிலையங்களுக்குச் சென்றார். சகல நலன்புரி நிலையங்களுக்கும் இவர் சென்று நிலைமைகளை அவதானித்ததாக செட்டிகுளம் நலன்புரி நிலைய பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்தனர். அத்துடன், செட்டிகுளம் மாவட்ட அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களையும் இவர் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வன்னி எம்.பி. வினோநோகராதலிங்கம் முன்னர் ஒரு தடவை நலன்புரி நிலையத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை ஆதரிக்கப்போவதாக கிஷோர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்த நிலையில், இவர் நலன்புரி நிலையங்களைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டார்