அகதிமுகாம்களில் தனது 3 பிரஜைகளை தேடிக்கொண்டிருக்கின்றது அவுஸ்திரேலியா

australia.jpgவவுனியா அகதிமுகாம்களிலுள்ள 3 இலட்சம் பேரில் 3 அவுஸ்திரேலியர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இரு பெண்களும், 62 வயதுடைய முதியவரும் இலங்கையில் முகாம்களில் இருப்பதாக நம்பப்படுவதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இல்லை என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை என்றும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீபன் ஸ்மித் நிருபர்களிடம் தெரிவித்ததாக “த ஏஜ் கொம்’ இணையத்தளம் தெரிவித்தது.

இந்த மூன்று அவுஸ்திரேலியப் பிரஜைகளும் அகதிமுகாம்களில் ஒன்றில் இருப்பதாக நாம் நம்புகிறோம். இலங்கையின் வடபகுதியில் அதிகாரிகள் தற்போது உள்ளனர். அவுஸ்திரேலியப் பிரஜைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர்களின் கவனத்திற்கு ஸ்மித் கொண்டுசென்றுள்ளார். ?எமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர்கள் பாதுகாப்புடன் இல்லை என்று நாம் நம்புவதற்கான காரணமாக இது உள்ளது. அவர்களை இப்போது எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. யு.என்.எச்.சி.ஆர். மூலமாகவோ இலங்கை அதிகாரிகள் ஊடாகவோ எம்மால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை கண்டுபிடிக்க தீவிரமாக முயன்று வருகிறோம் என்றும் ஸ்மித் கூறியுள்ளார்.

அதேசமயம் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கும் யு.என்.எச்.சி.ஆர், ஐ.சி.ஆர்.சி ஆகியவற்றை முழு அளவில் அனுமதிக்க வேண்டும் என்று இலங்கையிடம் ஸ்மித் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *