உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு மியன்மார் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடு திரும்பினார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த 14ஆம் திகதி மியன்மாருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அந்நாட்டின் தலைவர், பிரதமர் உட்பட உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான சமய, கலாசார,வர்த்தக மற்றும் உல்லாசப் பயணத்துறை என்பவற்றை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
இலங்கையிலிருந்து பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.