ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று (13.06.2009) மியன்மாருக்கு செல்கின்றார். அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 60 ஆண்டுகள் பூர்தியடைவதை முன்னிட்டு இந்த விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மியன்மாரில் 2008ம் ஆண்டு ஏற்பட்ட நர்க்கிஸ் புயலில் பாதிக்கப்பட்டு மீள புனரமைக்கப்பட்ட கிராமம் ஒன்றை ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது அங்குரார்ப்பணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கிராமத்தின் நிர்மாணப்பணிகளுக்கென இலங்கை பிக்குமார் நிதியுதவி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.