த. தே. கூ. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுமுறை : சபாநாயகர் அறிவிப்பு

parliament-of-sri-lanka.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என சபாநாயகர் டப்ளியூ.ஜே.எம். லொக்குபாண்டார தெரிவித்துள்ளார்.

தற்போது வெளிநாடுகளில் தங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.கஜேந்திரன் மற்றும் எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஆகியோர் தமக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் எனக் கோரி அனுப்பியுள்ள மருத்துவச் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனையடுத்து இவர்களுக்கு மூன்று மாத விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை விடுமுறை கோரியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் இன்று நாடாளுமன்றத்திற்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *