நாட்டில் தொழில் புரிகின்ற அனைவரையும் பாதுகாக்க புதிய சட்டமூலம் -பாராளுமன்றத்தில் அமைச்சர் அதாவுத செனவிரத்ன

parliament-of-sri-lanka.jpgதொழில் புரியும் அனைத்து மக்களினதும் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்புக்கான புதிய சட்டமூலம் ஒன்றை வரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக தொழில் உறவுகள் மற்றும் மனித வலு அமைச்சர் அதாவுத செனவிரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய நிறுவன சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் நேற்று இதனைக் குறிப்பிட்டார்.

1942 இல் நிறைவேற்றப்பட்ட தொழிற்சாலைக் கட்டளைச் சட்டத்தின் மூலம் தொழில் புரிகின்ற 25 இலட்சம் பேர் பயன்பெறுகின்றனர். எனினும் உத்தேச புதிய சட்டத்தின் மூலத்தின் ஊடாக நாட்டில் தொழில் புரிகின்ற 80 முதல் 90 இலட்சம் பேர் நன்மை அடைவர் என அமைச்சர் மேலும் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *