மன்னாரில் பாடசாலைக்கல்வியை விட்டு விலகிய மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் பிரதேசச் செயலாளரின் தலைமையில் பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்றது.
பாடசாலைக் கல்வியை தொடராத நிலையில் கடற்கரைப்பகுதியில் வேலைக்கு அமர்த்தப்பட்ட 20 மாணவர்களுக்கே மேற்படி தொழிற் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சின் நிதி அனுசரணையில் மேற்படி தொழில் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கும் கடற் தொழிலுடன் சம்பந்தப்பட்ட வெளி இணைப்பு இயந்திரம் திருத்துதல் (அவுட் மோட்டர்) தொழிற்பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் சிறப்பு விருந்தினராக ஈ.பி.டி.பி அமைப்பின் மாவட்ட பொருப்பாளர் லிங்கேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேற்படி 20 தொழிற்பயிற்சியாளர்களுக்கும் மாதம் ஒன்றிற்கு 4000/= கொடுப்பணவுகள் வழங்கப்படும் எனவும் 06 மாதங்களைக் கொண்டதாக பயிற்சி அமையும் என்றும் மன்னார் பிரதேசச் செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் தெரிவித்தார்.