வவுனியா நிவாரணக் கிராமங்களில் 6 வெளிநாட்டு பிரஜைகள்

இலங்கை யுத்த வலயத்திலிருந்து இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்கியுள்ள பொதுமக்களுடன் ஆறு வெளிநாட்டு பிரஜைகளும் சிக்கியுள்ளதை அரசாங்கம் கண்டறிந்துள்ளது.

மூன்று அவுஸ்திரேலியர்களும், பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் நோர்வே நாடுகளை சேர்ந்த தலா ஒருவருமாக ஆறு பிரஜைகள் இவ்வாறு நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளனர்.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஆறு வெளிநாட்டுப் பிரஜைகளே இவ்வாறு சிக்கியுள்ளதாகத் தெரிவித்த மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணினார்களா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *