20 வருடங்களின் பின்னர் யாழ் தேவி புகையிரதம் முதற் தடவையாக நாளை சனிக்கிழமை தாண்டிக்குளம் வரை பயணிக்கவுள்ளது. நாளை காலை புறக் கோட்டையிலிருந்து புறப்படும் யாழ் தேவி புகையிரதம் தாண்டிக்குளம் வரை செல்லுமென போக்கு வரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார். யாழ் குடா நாட்டுக்கான புகையிரதசேவை ஆரம்பிக்கப்படுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையே தாண்டிக்குளம் வரையிலான முதற்கட்ட சேவையென அமைச்சர் சுட்டிக்காட்டிள்ளார்.