கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த இன்று (05.06.2009) வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன் போது இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்பில் விரிவாக ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மாணவர்களுக்கென அமைச்சர், பாடசாலை சீருடை, தளபாடங்கள், மற்றும் கற்றல் உபகரணங்கள் என்பவற்றை வழங்கியுள்ளார். இந்த மக்களின் நிலை குறித்து மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கல்வி அமைச்சருக்கு விளக்கமளித்துள்ளார்.