திரு கோணமலை மாவட்டத்தைச் இருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்ட நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள அகதிகளில் எஞ்சியுள்ள குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் இறுதிக் கட்ட பணிகள் நேற்று ஆரம்பமாகின.
இரண்டு கட்டங்களில் இடம்பெறவுள்ள இத்திட்டத்தின் இறுதிக் கட்டம் எதிர்வரும் 8 ஆம்; திகதி நடை பெறுமென மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஏறாவூர்ப்பற்று செயலகப் பிரிவில் பலாச்சோலை மாவடிவேம்பு, கிரிமுட்டி பண்ணை ஆகிய அகதி முகாம்களில் தங்கியுள்ள 121 குடும்பங்களைச் சேர்ந்த 493 பேர் திருகோணமலை – கிளிவெட்டி இடைத்தங்கல் முகாம்களுக்கு அழைத்துச் செல்ல 17 பஸ் வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் அகதிகள் விருப்பமின்மை காரணமாக ஒரு தொகுதியினரே சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அகதிகள் மீள்குடியமர்வின் இறுதிக் கட்டமாக ஆலங்குளம், கொக்குவில், சத்துருக்கொண்டான், பாலமீன்மடு, சிங்கள மகா வித்தியாலயம், சாஹிரா முகாம், ஆரையம்பதி ஆகிய நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள 494 குடும்பங்களின் 1628 பேர் கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த அகதிகள் வாகரை வழியாக பொலிஸ் பாதுகாப்புடன் யுஎன்எச்சிஆர் பிரதிநிதிகளின் கண்காணிப்புடன் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.