வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற ஜப்பான் 1.4 மில்லியன் ரூபா உதவி – இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

japan_extends.pngவடக்கி லுள்ள பிரதேசங்களில் காணப்படும் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 1.4 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ எம்.பி. முன்னிலையில் இது தொடர்பான இரண்டு ஒப்பந்தங்கள் நேற்று கைச்சாத்திடப்பட்டதாக கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற வைபவத்தில் வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ளவுள்ள டானிஷ் டெமினிங் குரூப், மற்றும் ஹலோ ட்ரஸ்ட் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் குயினோ டக்காஷி ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார். இது தொடர்பாக கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக டானிஷ் டெமினிங் குரூப் நிறுவனத்துக்கு 160 மில்லியன் ரூபாவும் ஹலோ ட்ரஸ்ட்  நிறுவனத்துக்கு 80 மில்லியன் ரூபாவும் வழங்கப்படவுள்ளன என்றும் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *