யாழ். மாவட்டத்தில் சேதமடைந்த இருபத்திரெண்டு வீதிகள் நாற்பது மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளன.
கடல்கோளால் பாதிக்கப்பட்ட பிரதேச மீள்கட்டுமானத்திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தில், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பிரிவில் பருத்தித்துறை பிரதேச சபைக்குட்பட்ட எரிந்த அம்மன் கோயில் வீதி, மேலைப்புலோலி பாடசாலை வீதி, வலிக்கண்டி உள்ளக வீதி மற்றும் கல்லூரி வீதி, சுப்பர் மடம் வீதி, மணல் ஒழுங்கை வீதி ஆகியவை புனரமைக்கப்படவுள்ளன.
வல்வெட்டித்துறை நகரசபைப் பகுதியில் காத்தவராயன் வீதி, சமத்தணை வீதி, நெடியகாடு பிள்ளையார் கோவில் வீதி, மயிலியதனை வீதி, தொண்டமனாறு எல்லை வீதி, முருகையன் கோயில் வீதி, தொண்டமனாறு கெருடாவில் வீதி, புற்றளை பிள்ளையார் கோயில் உபய கதிர்காமம் வீதி ஆகியன புனரமைக்கப்படவுள்ளன.
இதேவேளை, நெடுந்தீவு துங்காலை கிராம வீதியும் பருத்தித்துறை புனித சேவியர் கடற்கரை வீதியும் புனரமைக்கப்படவுள்ளன. வீதிப்புனரமைப்பு வேலைகளை தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்க கேள்விகள் கோரப்பட்டுள்ளன. வேலைகள் இம்மாத இறுதியில் ஆரம்பமாகும்.