இலங்கை விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற விவாதம் மற்றும் வாக்கெடுப்பு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இலங்கையினால் முன்வைக்கப்பட்ட உத்தேச யோசனைத் திட்டம் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட போதிலும், மனிதாபிமான பாதிப்புக்கள் குறித்து மனித உரிமைகள் பேரவை உரிய முறையில் கவனம் செலுத்தவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.