மட்டு. மாவட்ட பாடசாலைகளில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கவென மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு, மட்டக்களப்பு மத்தி, பட்டிருப்பு, கல்குடா ஆகிய நான்கு கல்வி வலயங்களிலுமுள்ள பாட சாலைகளிலேயே நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன.

மாணவர்கள் நிவாரணப் பொருட்களை பாடசாலை அதிபரிடம் கைய ளிக்க அதிபர் அப்பொருட்களை கோட்டக்கல்விப் பணிப்பாளரிடம் வழங்கினார். கோட்டக் கல்விப் பணிப்பாளர் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் வழங்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்றுவருகின்றது.

சேகரிக்கப்படும் பொருட்களை வலயக் கல்விப் பணிப்பாளர் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினூடாக இடம்பெயர்ந்த மக்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார். பிஸ்கட், பால்மா வகைகள், உடுப்பு போன்ற பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. காத்தான்குடிக் கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளிலும் இந் நிவாரணப் பொருட்கள் சேரிக்கப்பட்டு வருகின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *