தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் உயிரிழந்துள்ளமை மரபணு பரிசோதனையின் மூலம் உறுதியாகியுள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
பிரபாகரனதும் அவரது மகன் சாள்ஸ் அன்டனியினதும் இரத்த மாதிரிகளைக் கொண்டு மரபணு பரிசோதனையினை நடத்திய இராணுவ வைத்தியர் பிரிவின் விஷேட குழுவினரும் கொழும்பிலுள்ள தடய அறிவியல் துறை அதிகாரிகளும் இதனை இன்று உறுதிசெய்தனர் என்றும் அவர் கூறினார்.