அகதிகள் முகாமில் பிரபாகரன் பெற்றோர்: இலங்கை இராணுவம்

prabhs_parent.jpg விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையும் தாயும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஓர் இடைத்தங்கல் முகாமில் இருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இது பற்றி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்கள், பிரபாகரனின் பெற்றோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்காக அமைக்கப்பட்ட முகாமில் இருப்பது புதன்கிழமை மாலைதான் தங்களின் கவனத்துக்கு வந்ததாகக் கூறினார்

பிரபாகரனின் பெற்றோர்கள் காயங்கள் ஏதும் இன்றி நலமாக இருப்பதாகக் கூறிய அவர், படையினர் அவர்களை விசாரணைக்கு உட்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்.

புதுமாத்தளன் மற்றும் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் படையினர் நடத்திய மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவர்கள் இங்கே வந்திருக்கலாம் என்று தாம் கருதுவதாகவும், ஆனால் அவர்கள் எப்போது வந்தார்கள் என்பது குறித்து தமக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *